சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்துவருகிறார். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் முதியவருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.