மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் நிதியுதவி கோரி கடிதம் எழுதியுள்ளார்.
சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணத்திற்கு போதிய பணம் இல்லாததால் நிதி உதவி கேட்டு சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில்,” மருத்துவ மாணவிக்கு உதவ சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி நிதிஷா பிரியதர்ஷினி. இவர் தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் 444 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவருக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அவரது தந்தை ஊதுபத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 96 ஆயிரத்திற்கு கீழ் உள்ளது. தட்டுத்தடுமாறி இதுவரை படித்து வந்த மாணவிக்கு இனி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர இயலவில்லை. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை ஏதேதோ நவீன கல்லூரிகளை போன்று அரசு நடத்தி வருகிறது. இக்கல்லூரியை வசதியான மாணவர்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக அரசே மாற்றியது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே இந்த மாணவி மருத்துவ கல்லூரியில் சேர உடனடியாக நிதி உதவி அவசியப்படுகிறது. ஒரு ஏழை மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்ற நிதி உதவி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் வங்கி விவரங்கள்:
Name: NITHISHA PRIYA DHARSHINI .G
Acc no:1219108038636
Canara Bank
Suramangalam,Salem.
IFS Code : CNRB0001219
MICR code: 636015005