சேலம் மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் குமாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றிற்கு சென்ற போது கிணற்றினுள் புள்ளிமான் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவறி விழுந்த புள்ளி மானை உயிருடன் மீட்டுள்ளனர். இதனையடுத்து மீட்கப்பட்ட 2 வயது ஆண் புள்ளிமானை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.