சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஆண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் 40 வயதுடைய ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்ததால் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்ததுடன், இறந்தவர் யார் என்றும் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.