Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் விலை 50 சதவீதம்,11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவீதம், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% மதிப்பெண்களின் சராசரி கொண்டு கணக்கிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் செய்முறை தேர்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சில தினங்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்பட்டதா என்பது குறித்த நாளைய தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |