Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடையாகவே மாறிட்டு… இருக்கை எல்லாத்தையும் கழற்றியாச்சு… டிரைவர்கள் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக காய்கறி கடையாக சரக்கு ஆட்டோ மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அழகாபுரம் மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களிலுள்ள இருக்கையை கழற்றி விட்டு கூடைகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் செய்யக்கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து வழங்கிய கிளினிக்கை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓமியோபதி மருத்துவர் சீதாராமன் கிளினிக் வைத்துள்ளார். அவரது கிளினிக்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மருந்து விற்பனை செய்வதாகவும் மேலும் மருத்துவம் பார்ப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்தீஷ்குமார், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… நல்ல வேளை அங்க யாரும் இல்லை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த மெத்தைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இறைச்சி கடைகயை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுபடுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்து காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி சிகிச்சை அளிக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் நலன் கருதி… அலுவலகத்தில் வழங்கிய கபசுர குடிநீர்… கொரோனா குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியிலுள்ள  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பசுவகல் குண்டத்து மேடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அப்பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கூட்டம் கூடாது… இடமாற்றம் செஞ்சிட்டாங்க… தடுப்பூசி முகாம்..!!

சேலம் மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் கூட்டத்தை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் முகாமை இடம் மாற்றம் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியிலிருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் காலை 8 மணிக்கு சுகாதார நிலையத்திற்கு வருவதால் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது. மேலும் சில சமயம் தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் தேக்கி வைச்சிருக்கோம்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் 5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல், மேச்சேரி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். அந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை காரணமாக தமிழகத்தில் முழு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்கேயும் போக முடியல… யார் செய்த வேலையோ… வலை வீசி தேடும் போலீசார்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் பணம் மட்டும் நகையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரோசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாயை  மர்ம […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சாராயம் விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலாவரி ஏரி மற்றும் கொம்பேரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த சிலம்பரசன், சரவணன், கணபதி, செந்தில் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 42 சாராய பாக்கெட்டுள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல் துறையினர் சாராயம் விற்றதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் ஏத்தியாச்சு… மொத்தம் 1,240 டன் உரம்.. சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டது..!!

சேலம் மாவட்டத்தில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் சத்திரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்திற்கு வடமாநிலங்களிலிருந்து உரம், சிமென்ட் மற்றும் உணவு தானிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்படும். இந்நிலையில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 மண்டலங்களில் சிறப்பு முகாம்… ஆர்வமுடன் தடுப்பூசி போடும் மக்கள்… ஆய்வு செய்த அதிகாரி..!!

சேலம் மாவட்டத்தில் மாநகாராட்சி பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் சூரமங்கலம் மண்டலத்தில் திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் மண்டபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மண்ணோடு மண்ணாகி போகுது… எதுவும் விற்பனை செய்ய முடியல… மனவேதனை அடைந்த விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள திம்பம்பட்டி, கம்மாளப்பட்டி குரால்நத்தம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அரளிப்பூ சாகுபடி செய்துள்ளனர். அந்த கிராமங்களில் அறுவடை செய்யப்படும் அரளிப்பூக்கள் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன்  மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப சுவையா இருக்கும்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம், சக்கரை செட்டியபட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை சேலம் மாவட்டம் வெல்லம் வியாபாரிகளிடமிருந்து ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் ஈரோடு மற்றும் சேலம் லீ பஜார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கமும் விட்டு வைக்கல… வசமாக சிக்கிய வாலிபர்கள்.. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையத்தில் ஊழியரின் மொபைலை திருடிச்சென்ற வாலிபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சேத்துபாதை பகுதியில் தனியார் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குப்புசாமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் குப்புசாமியின் பாக்கெட்டிலிருந்த செல்போனை திருடியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்து தீவட்டிப்பட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் அழுகி வீணாகி போகுது… வேதனையில் விவசாயிகள்… நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த மாதங்களில் மாவட்டத்திலுள்ள மார்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாப்பாட்டுக்கு கூட வழியில்ல… கடிதம் அனுப்பிய தொழிலாளர்கள்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள்,  அமைப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… தீவிர வாகன சோதனை.. பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது ஒரே நாளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை.. அபராதம் வசூல்… வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 49 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த மற்றும் முக கவசம் அணியாத 49 பேர் மீது காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,300 பேர்… நேரடியாக வீட்டிற்கு சென்று… ஆய்வு செய்த அதிகாரி..!!

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது 44  வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மாவட்டத்தில் மொத்தம் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்.. வாகனத்தில் விழிப்புணர்வு… கொடியசைத்து தொடங்கி வைத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து காவல் துறையினர் வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் பகுதிகளில் காவல் துறையினர் 6 வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த பிரச்சார வாகனத்தை சேலம் மாநகர காவல் துறை உதவி கமிஷனர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதுவரை சூரமங்கலம் பகுதியில் 35 வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரத்தில் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுத்தே ஆகனும்… பெண்களை இழிவாக பேசிய ஊழியர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் யாரும் கடைகள் திறக்கவில்லை. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்கு சென்று சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்தியுள்ளனர். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

14 இடங்களில் செயல்படுகிறது… இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலுள்ள குளிர்பதன கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கொங்கணாபுரம், ஓமலூர் மற்றும் எடப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த விற்பனைக் கூடங்களில் 18 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் விளை பொருட்கள் வைக்கும் அளவிற்கு சேமிப்பு கிடங்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 3,515 பேர் மீது வழக்குப்பதிவு… தீவிர கண்காணிப்பு பணி.. அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த 3,515 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக கவசம்  அணியாமல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 3,515  பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 31 ஆயிரத்து 299 பேருக்கு போட்டாச்சு… முதல் தவணை தடுப்பூசி… ஆர்வமுடன் போட்ட பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் முதல் தவணையாக 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போப்பட்டுள்ளது. தற்போது 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வருகின்றது.  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ இருந்தாலும் பரவாயில்லை… அமோகமாக நடைபெறும் விற்பனை… திணறிய காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது சந்து கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மது கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சந்து கடையில் அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஊரடங்கினால் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 வாரத்துக்குள்ள எல்லாம் முடிக்கனும்… முழுவீச்சில் செயல்பட வேண்டும்… அதிகாரியின் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் கோவிந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் வீடுகள்தோறும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை 1 வாரத்துக்குள் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாழப்பாடி புதுப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தொற்றல் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால அவதிப்பட முடியல… மனவேதனையில் மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத கணவர்..!!

சேலம் மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாததால் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தெய்வானை என்ற மனைவி இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற தெய்வானை மனவேதனை அடைந்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காலையில் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

7,700 கோவிஷீல்டு தடுப்பூசி… சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டது… அலைமோதிய மக்கள் கூட்டம்..!!

சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை தீவிரமாக அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையிலிருந்து 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை மையம்… 70 படுக்கை வசதிகளுடன்… அதிகாரி தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை கூடத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் மாநில வேளாண்மை விற்பனை கூடத்தில் பயிற்சி வளாகம் உள்ளது. அந்த வளாகத்தில் தொற்று பரவுவதை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆத்திரமடைந்த பொதுமக்கள்… தகவல் பலகையில் ஒட்டிய செய்தி… சுகாதார நிலையத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களை தொற்றிலிருந்து காத்துக்கொள்ள கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளில் ஒன்றைப் போட்டுக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமி பட்டியிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அப்போது அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் சுகாதார நிலையத்தில் தடுப்பூசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்… வெடி விபத்தில் பறிபோன உயிர்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வெடி விபத்துக்கு காரணமான கல் குவாரி உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிச்சிப்பாளையம் பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கந்தாஸ்ரமம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அத்தனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் குமார் என்ற இருவரும் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாறையை தகர்க்க வைத்திருந்த வெடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்… தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுபாக்கெட்டுகளை மது விலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை மதுவிலக்கு காவல் துறையினருக்கு தீவட்டிப்பட்டி பகுதிகளுக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் ஜோடுகுளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கர்நாடகாவிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருப்பு கொடி ஏந்தி போராட்டம்… விவசாயிகளுக்கு ஆதரவாக… த.மு.மு.க கட்சி சார்பில்…!!

சேலம் மாவட்டத்தில் த.மு.மு.க கட்சி மற்றும் மனித நேய கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மற்றும் தங்களது கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சேதமாகிட்டு… தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… மனவேதனை அடைந்த விவசாயிகள்..!!

சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளதால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தேவூர், கொட்டாயூர், பெரமாச்சிபாளையம் மற்றும் சென்றாயனூர்  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் எள் உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி செடிகளுக்கு மண் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எள் சாகுபடி செய்த விவாசாயிகள் அறுவடை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

182 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்… தீவிர வாகன சோதனை… முழு ஊரடங்கு…!!

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 182 பேரின் மோட்டார் சைக்கிளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சாலைகளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வது நாளாக கடைப்பிடிப்பு.. முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 2 வது நாளாக சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மளிகை கடை, காய்கறி கடைகள் அனைத்தும் 2 வது நாளாக அடைக்கப்பட்டிருந்தது. மேலும் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் செவ்வாய்பேட்டை, லீபஜார், சின்னக்கடை வீதி மற்றும் புதிய பேருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்… இடி மின்னலுடன் பலத்த மழை… அவதிப்பட்ட மக்கள்..!!

சேலம் மாவட்டத்தில் வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் என்பதால் கடும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் திடீரென வானம் இருள்சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கிய போலீஸ்… வாகனங்கள் மூலம்… கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2  வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகர காவல் துறையினர் சார்பில் பள்ளப்பட்டி மற்றும் அழகாபுரம் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு பள்ளப்பட்டி காவல் நிலையம் முன்பு நடைபெற்றுள்ளது. அந்த விழிப்புணர்வில் சேலம் மேற்கு சரக காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுவும் வாங்க முடியல… இரு மடங்கு விலை உயர்வு… ஊரடங்கால் அவதிப்படும் மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தை அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் காய்கறி விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 4 உழவர் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வார்டுகளிலும் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் மளிகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 180 பேர் மீது வழக்கு… 25 பேரிடம் அபராதம் வசூல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 180 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்ததாக 180 பேர் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி விற்பனை செய்யலாம்… பாதியிலேயே மூடப்பட்ட சந்தை… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வாரச்சந்தை நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி விவசாயிகள் வாரச்சந்தை நடத்தியுள்ளனர். அந்த வாரச்சந்தையில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமானதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் வட்டார அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரம் செய்ய கூடாதென கூறி அனைவரையும் கலைந்து போக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைவரும் கடைப்பிடிக்கனும்… கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்… உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்..!!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கபபட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30 வது ஆண்டு நினைவு நாளையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவாட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதப்பிரியா தலைமை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக கொரோனா சிகிச்சை மையம்… நலம் விசாரித்த முதலமைச்சர்… மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு..!!

சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம் வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து அவர் காரில் புறப்பட்டு சென்ற போது மகுடஞ்சாவடியிலுள்ள அரசு ஆரம்ப […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு சந்தையும் இல்லை… வார்டு வாரியாக காய்கறிகள் விற்பனை… அதிகாரி தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம், தாதகப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரம் பாதிப்பு… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வருமானமின்றி தவித்து வருகின்றார்கள். இதனால் வீட்டு வாடகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள முள்ளங்குடி கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி 15 நாட்களான நிலையில் இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களான வசந்த் மற்றும் தினேஷ் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து ஒரே காரில் மேட்டூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தலைவாசல் அருகே இருக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6,716 பேர் மீது வழக்கு… 547 வாகனங்கள் பறிமுதல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 6,716 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையம் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

177 மண்டல குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்… ஆலோசனை கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தீவிரமாக கண்காணிக்க புதிதாக 177 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை […]

Categories

Tech |