Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ எப்படி விழுந்துந்துச்சு…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விவசாயி…. உயிருடன் மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் குமாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றிற்கு சென்ற போது கிணற்றினுள் புள்ளிமான் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவறி விழுந்த புள்ளி மானை உயிருடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவில்…. சேதமடைந்த மேற்கூரை…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க சிவகாமசுந்தரி கோவிலில் சாமி சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததனால் சீரமைத்து தர வேண்டி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சித்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுற்று சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதுடன் கோவில் சிலைகள் பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவிலில் அம்பாள் சிலை உள்ள சன்னதியில் மேற்கூரையின் மரப்பலகை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வந்துட்டு இருந்தேன்…. நிலை தடுமாறியதால் பறிபோன உயிர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி இழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடற்பயிற்சி நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவின்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களின் பிழைப்பே போச்சு…! குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை…. புலம்பும் வியாபாரிகள்….!!

சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். எடப்பாடியை அடுத்த இயற்கை அழகுடன் மலைகள் சூழ்ந்த, ரம்மியமான பூலாம்பட்டி காவிரி ஆற்றை சுற்றி பார்க்க பொதுமக்கள் வருகை புரிவது வழக்கம். இது தவிர விடுமுறை நாட்களில் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்து செல்வர். மேலும் அங்குள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ….மலை கோட்டை பகுதிக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமா பரவுவதால் மலைகோட்டை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மலைப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கேசவ பெருமாள் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நாள்தோறும் மலைக் கோட்டையை சுற்றி பார்க்கவும் அங்குள்ள கோவில்களில் சாமியை தரிசிக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் திரளான பகதர்கள் செல்வது வழக்கம். இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை  தடுக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை கூட விட்டு வைக்காதிங்க… முயல் வேட்டையாட வந்த வாலிபர்கள்…. கைது செய்த வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வனப்பகுதியில் முயல் வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜருகுமலை வனப்பகுதியில் அடிக்கடி முயல் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனக்காப்பாளர் விஜய குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் வன சரக பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை வழிமறித்து விசாரணை செய்த போது அவர்கள் பனமதுரப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரமேஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாகிய சமூக இடைவெளி…. இனி இறைச்சி கடை திறக்கப்படாது… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் மார்கெட்  திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஞாயிற்றுக் கிழமை என்றாலே மக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதனையடுத்து சேலம் மாநகராட்சியிலுள்ள இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. அதிகரிக்கும் கொரோனா …. பலியான மூதாட்டி….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா  பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 6 ஆயிரத்து 686″…. பாதுகாப்பாக நடைபெற்ற எழுத்து தேர்வு…. நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர்….!!

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்ற அறையை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட  அலுவலக பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை  மாவட்டத்தில் 6 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம்மா கொலை செய்வீங்க…. மது வாங்குவதில் தகராறு… ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி…!!

சேலம் மாவட்டத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளர். சேலம் மாவட்டத்திலுள்ள மாதையன்குட்டை பகுதியில் ஜெகதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மது வாங்கி வருவதன் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கும் ஜெகதீஷ்குமார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தமிழரசன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஜெகதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை காரணமாக  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 லட்சம்… சிறப்பாக நடைபெற்ற பருத்தி ஏலம்… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு மையத்தில் 1300 பருத்தி மூட்டைகள் மொத்தம் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனை கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பருத்தி ஏலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி,  மேட்டூர்  மற்றும் சேலம் பகுதியிலுள்ள விவசாயிகள் ஏலத்திற்க்காக பருத்தி மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் டி.டி.எச் ரக பருத்தி 100 கிலோ, 17 ஆயிரத்து 550 முதல் 9 ஆயிரத்து 90 வரையிலும், பி.டி. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி தேவையில்லாம வெளியில வர முடியாது….மொத்தம் 360 களப்பணியாளர்கள்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் அம்மாபேட்டையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் 90 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சளி- இருமல் இருக்குன்னு போனோம்…. ஒரே குடும்பத்தில் ஊடுருவிய கொரோனா…. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சளி இருமல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொந்த வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்….கோஷமிட்டு வரவேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் புறநகர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து ஓமலூரிலுள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்க்கு சென்றள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாக மாறிய சமூக இடைவெளி..? அலை மோதிய மக்கள் கூட்டம்… ஜோராக நடைபெற்ற விற்பனை..!!

சேலம் மாவட்டத்தில் தொற்று காலத்திலும் சனிக்கிழமை வாரசந்தை சிறப்பாக நடைபெற்றுள்ளது சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடியை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து விவசாயிகள் கோழி மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்நிலையில் கொங்கணாபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் ஆடு, கோழிகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சந்தையில் ஒரு ஆடு 5 ஆயிரத்து 5000 முதல் 7000 வரையிலும், ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. தடுப்பூசி தட்டுப்பாடு…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு ஏன் திருமணம் செஞ்சு வைக்கல… ஏக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்திக் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் பெற்றோர்கள் இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்பதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயணிகளின் வரத்து பாதிக்கு கீழ் குறைந்தது…. கொரோனா தொற்றின் விளைவு…. ரயில்வே அதிகாரி தெரிவித்த தகவல்….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்து விட்டது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பயணிகள் ரயில் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று குறைந்த சில மாதங்களாக பயணிகளில் கோரிக்கையை ஏற்று மறுபடியும் முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை வீசத்  தொடங்கியதால் தொற்றால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“45 வயதிற்க்கு மேற்பட்டோர்”…. ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க  ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க  மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45  வயதிற்கு மேற்பட்டோர்  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் பாலியல் பலாத்காரம்…. ஆசை வார்த்தையை நம்பிய சிறுமி…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம் பகுதியிலுள்ள சகோதரி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவினால் ஏற்பட்ட விளைவு…. சந்தையில் மாடு விற்பனை மந்தம்… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் மாட்டுச்சந்தையில் மாடு விற்பனை மந்தமாக உள்ளதென்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில்  அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு  நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளை  கொண்டு வருவது மட்டுமன்றி  வாங்கியும்  செல்வார்கள். இதனையடுத்து கேரளா, கர்நாடகம், மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் பெருமளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் சென்ற மர்ம நபர்கள்….. வெறும் கையுடன் வீட்டிற்கு சென்ற பெண்… வலை வீசி தேடும் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயா அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று 30,000 பணம் எடுத்து கொண்டு வங்கிக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் நின்ற ஆட்டோவில் ஏற முயன்ற போது அந்த வழியாக தலையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்  விஜயாவிடமிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 35 ஆயிரத்து 136″…. அதிகரிக்கும் கொரோனா…. தொற்றினால் ஏற்படும் விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது இரண்டு நாட்களில் 407 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதனையடுத்து சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடைக்கு போயிட்டு வாரேன்னு போனா…. கதறிய பெற்றோர்கள்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெரியவடகம்பட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்போது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் சிறுமியை தேடி அலைந்துள்ளனர். ஆனால் சிறுமி எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வாரங்களுக்கு தீவிரமாக பரவும் சூழல்…தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!

சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு தொடங்கியுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா… அதிர்ச்சியில் சக ஊழியர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் மத்திய சிறையில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் சுப்பிரண்டுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்செல்வனுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் குபேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இனியவன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் அதேப் பகுதியை சேர்ந்த ஹரீஷ் மற்றும் இனியவன் இருவரும் அப்பகுதியிலுள்ள சரபங்கா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஆழத்திற்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் இருந்தவர்கள் அவர்களை  மீட்டு அருகிலுள்ள  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்… கொட்டித் தீர்த்த கனமழை…. குளிர்ச்சியடைந்த பூமி…!!

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் இரவு நேரத்தில் வெப்ப சலனத்தால் மக்கள் துங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 150 டிகிரி வரை  பதிவான நிலையில் திடீரென இடி மீன்னலுடன்  கூடிய மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் சாக்கடை நீருடன் மழை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தீச்சட்டி ஏந்தி வழிபாடு”…. கொரோனா இந்த உலகத்தை விட்டு ஒழிய வேண்டும்…. சிறப்பு பூஜை செய்த திருநங்கைகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிய வேண்டுமென திச்சட்டி ஏந்தி திருநங்கைகள் அம்மனுக்கு பூஜை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நவகிரக பெரியாண்டியாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்த உலகத்தை  விட்டு ஒழிய வேண்டுமென்று, மக்கள் பாதிப்பிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இன்னும் 3 நாட்களில்”…. 500 படுக்கை வசதிகளுடன்… சிறப்பாக செயல்பட உள்ள கொரோனா சிகிச்சை மையம்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 500 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் இன்னும் 3 நாட்களில் செயல்படும் என ஆணையர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணியனூர் சட்ட கல்லூரியில் 100  படுக்கை வசதிகள் மற்றும் கோரிமேடு அரசு சட்டக்கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு… 50 % அனுமதிக்க வேண்டும்…. டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் திருமண விழாக்களில் 50 % பேர் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால் தொற்றை தடுக்கும் முறையில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திருமண விழாக்களில் அதிகமானோர் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ தான் எல்லாத்துக்கும் காரணமா…. இதுவரை 31 வாலிபர்கள் கைது…. தீவிர விசாரணையில் போலீசார்…!!

சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய கொலையாளி நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டது. இந்தக் கொலை காரணமாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்தில் அருள்பாலித்த சாமி…. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற புத்தாண்டு பூஜை…!!

சேலம் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு ராஜ கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  சேலம் டவுனில் அமைந்துள்ள ராஜ கணபதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தங்க கவசத்தில் ராஜகணபதி சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்காக போனேன்…. எனக்கு வருமுன்னு நினைக்கல…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக குஜராத்திலிருந்து வந்த போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை வீரர்கள் 85 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்தஆயுதப்படை வீரர்கள் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணிக்கு வந்தவர்களில் ஒருவரான போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல் துறையினர்….!!

சேலம் மாவட்டத்தில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மாரமங்களம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் வீட்டில் திருட்டுத் தனமாக சாராயம் விற்பனை செய்ததாக காவல் துறையின் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி காவல் துறையினர் சுப்பிரமணி வீட்டில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு சாராயம்  காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

108 வலம்புரி சங்காபிஷேகம்….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…. மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் அய்யனாரப்பன் சாமி கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  ஜலகண்டாபுரம் பகுதியில் அய்யனாரப்பன் சாமி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்று அதிலிருந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அய்யனாரப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை, பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அய்யனாரப்பனுக்கு 108  வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருவிழாவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யாருக்கும் எதும் ஆகல…. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வேன் ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து கிரிவாசன் என்பவர் சரக்கு வேனில் தனியார் பார்சல் பொருட்களை ஏற்றி விட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கிரிவாசனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனால் வேன் நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் ஏறி மேலும் போக்குவரத்து சிக்னல், எச்சரிக்கை பலகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் சுந்தர்ராஜன் தனது குடும்பத்தினருடன் வேலை காரணமாக மேட்டூர் அனல் நிலைய குடியிருப்பு பகுதியிலே தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் ஹரிஹரன் தமிழ் புத்தாண்டையொட்டி நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து விராளிக்காடு காவிரி ஆற்றில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 55 1/2 லட்சம்”….. ஜோராக நடைபெற்ற விற்பனை… அலை மோதிய மக்கள் கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தையில் தமிழ் புத்தாண்டையொட்டி காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, தாதகப்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 11  உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தைக்கு விற்பனைக்காக காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு கொண்டு வந்துள்ளனர். இதனால் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதுக்குகுறித்து வேளாண்மை துறை அதிகாரி கூறியுள்ளதாவது  சந்தைக்கு  842 விவசாயிகள் 201 டன் காய்கறிகள் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத் தான் காரணம்….. கணவரின் திடிக்கிடும் தகவல்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் தகராறு ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலாமணி என்ற மனைவி இருந்தார். கலாமணி திருமணத்திற்கு முன்பு சின்னப்பம்பட்டியிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் அந்த வேலையை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கும் கலாமணிக்கு இடையே தகராறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மணியனூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறர். இவருக்கு திருமணமாகி சரளாதேவி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக செல்வத்திற்கும் அவரது மனைவி சரளாதேவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் வேலைக்கு போக நினைத்தேன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… !!

சேலம் மாவட்டத்தில் விபத்தின் போது கிழே விழுந்தவர் மீது காவல் துறையினர் பேருந்து ஏறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோரிக்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் செவ்வாய்பேட்டையிலுள்ள வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்…. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில்  திடீரென கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் வெப்ப சலனத்தால் இரவு தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100.4 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வகைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோடி கணக்கில் ஏலம் போன பருத்திகள்…. மகிழ்ச்சியுடன் சென்ற விவசாயிகள்… சங்க நிர்வாகி வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த வேளாண்மை விற்பனை சங்கத்திற்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதில் டி.சி.எச் ரக பருத்தி வகைகள் 100 கிலோ 6 ஆயிரத்து 800 முதல் 9 ஆயிரத்து 139 வரையிலும், பி.டி ரக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் உழைப்பு முழுவதும் போச்சே…. மழையினால் ஏற்பட்ட பாதிப்பு…. கண்ணீர் விட்ட விவசாயி….!!

சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பிபாடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய தோட்டத்தில் சுமார் 2  1/2 ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் அறுவடைக்கு வாழைத்தார்கள்  தயாராக உள்ள நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் தடுப்பூசி திருவிழா…. ஆர்வத்தில் பொது மக்கள்… சுகாதாரத்துறை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக உருவெடுத்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மருமகளின் குடும்பத்தார் வெறிச் செயல்…மாமனாருக்கு ஏற்பட்ட கொடுமை…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனாரை மருமகளின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தமிழ் செல்வி என்ற மகள் மற்றும் செல்வக்குமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி முழுவதும் சாம்பலாயிருச்சே…. தீப்பிடித்து எரிந்த நார் பண்டல்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் நார் மில்லில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.ஆர். தோப்பூர் பகுதியில் நார்மில் ஒன்று நீண்ட வருடமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நார் பண்டல்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நார்மில் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க எல்லோரும் கண்டிப்பா போட்டுக்கணும்….. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு…. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட சுகாதரத்துறை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரநிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுக்கும் முயற்சியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுப்பற்றி மாநகராட்சி தலைவர் கூறியுள்ளதாவது,  மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் பேர் வசித்து […]

Categories

Tech |