சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் சரக்கு வேனில் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் வேனின் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து […]
Category: சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக சிறப்பு சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை வீசத்தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுப்பதற்க்காக தற்போது சிறப்பு சித்த மருத்துவ மையம் ஒன்று கோரிமேட்டிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் திறக்கபட்டுள்ளது. இதுக்குறித்து மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறும் போது கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ […]
சேலம் மாவட்டத்தில் ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் சரியாக செய்யப்படாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கட்டிகாரனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் ஒழுங்காக விநியோகிக்க படவில்லை. இதனால் மக்கள் தண்ணீரின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணியிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் […]
சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ. 10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சமத்துவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், 10 வயதுடைய எனது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் அவர் பேத்தியை என்னிடம் காண்பிக்க […]
சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கிழே விழுத்த மயிலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வனவிலங்குகளை மக்கள் வேட்டையாடி விடக்கூடாது என்பதற்காகவும் வனவிலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து பறந்து வந்த மயில் ஒன்று நாயக்கன்பட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மயிலை விரட்டியுள்ளனர். அப்போது மயில் மாடியிலிருந்து கிழே விழுந்துள்ளது. இதனால் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். […]
சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்தியமூர்த்தி, மார்க்கண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது தந்தை சடையனிடம் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த இளைய மகன் மார்க்கண்டன் அப்பாவிடம் எதற்கு சண்டை போடுகிறாய் என்று சத்தியமூர்த்தியிடம் விவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]
சேலம் மாவட்டத்தில் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலையில் எலும்புக் கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. செங்கரடு, தேக்கம்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேலம் செல்வதற்கு குறுக்கு வழியாக அந்த தொழிற்சாலை பகுதியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முட்கள் நிறைந்த அந்த பகுதியில் எலும்பு கூடு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை […]
சேலம் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வனத்துறையினருக்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக வனச்சரகர் சின்னதம்பி தலைமையில் வனக் காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக நாட்டுத் துப்பாக்கியுடன் மொபட்டில் வந்த இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர்கள் அழகாபுரத்தை சேர்ந்த மாதையன் மற்றும் பெரியசாமி என்பதும் அவர்கள் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட […]
சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி பெண்களை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை பகுதியில் அப்சல் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது நூற்றுக்கணக்கில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கில் காவல்துறையினர் அப்சலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அப்சல் பொன்னம்மாபேட்டையிலுள்ள திப்பு நகர் பகுதியில் மது அருந்து விட்டு பெண்களைப் பார்த்து கிண்டல் செய்துள்ளார். இதனால் […]
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் நிறேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பார்வையிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள திப்பம்பட்டி பகுதியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, உபரி நீர் திட்டத்திற்காக அணையின் ஒரு கரையை உடைத்தது சட்டத்திற்கு எதிரான செயல் என்றும், இந்த செயல் விவசாயிகளை மிகவும் பாதிப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக காந்தி விளையாட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட […]
சேலம் மாவட்டத்தில் மார்க்கெட்டிலுள்ள வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலாஜி சேலம் கடை வீதிக்கு சென்று முருகன் என்ற வியாபாரியிடம் 12 தேங்காய் வாங்கி விட்டு அதற்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேறு ரூபாய் […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
சேலம் மாவடத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு சிமெண்ட் மூட்டைகள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலைய மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவை சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய மார்க்கெட்டிற்க்கு 1300 டன் சிமெண்ட் மூடைகள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கரூரிலிருந்து சேலத்திற்கு 630 டன் சிமெண்ட் மூடைகள் […]
சேலம் மாவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சின்னம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அம்மனுக்கு 108 பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, […]
சேலம் மாவட்டத்தில் பஸ் பட்டறை தீடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்து பட்டறை ஒன்று கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென பேருந்து பட்டறை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பட்டறை உரிமையாளருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் சித்த மருத்துவர்களால் செயல்பட உள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளிகள் கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றை தடுக்கும் முறையில் ஏற்கனவே மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது […]
சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டிவலக தூய செல்வநாயகி ஆலயம் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த ஒரு வாரமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து செபஸ்தியர், அருளப்பர், உலக மீட்பர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு முக்கிய […]
சேலம் மாவட்டத்தில் ராஜகணபதி கோவிலில் உண்டியலிலுள்ள காணிக்கையை எண்ணும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் 4 உண்டியல்கள் உள்ளது. அந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்காகற்காக கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமா தேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மேற்பார்வையில் கோவில் உண்டியலிலுள்ள காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உண்டியல் […]
சேலம் மாவடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை என்ன தலைவாசலிளிருகும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். போலீசாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஞானசேகர் பணி மாறுதலில் இன்ஸ்பெக்டராக ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் […]
காட்பாடி சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சியின் சில பகுதிகளையும், திருவலம் பேரூராட்சியையும், 21 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு 2,47, 428 வாக்காளர்கள் உள்ளனர். காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன். வேளாண்மை, நெசவு, கயிறு திரித்தல், பீடி சுற்றுதல் ஆகியவை இத்தொகுதியின் முதன்மை தொழில்களாக உள்ளன. இத்தொகுதியில் தாலுக்கா மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பதும், அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் இங்குள்ள […]
சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்கும் அளூர்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். வடிவேல் தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு புத்தாடை எடுக்க தாரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு புத்தாடை எடுத்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து […]
சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்குக்கும் ஆத்துக்காடு பகுதியில் இரண்டு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிசாமி தாரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை […]
சேலம் மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் கொள்ளை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மும்முடி சாலையில் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம் மையத்தில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் இவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பணி நீடிப்பை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணிபுரிய வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவர்கள் கடந்த மாதத்துடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா காரணமாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பயிற்சி டாக்டர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி டாக்டர்களிடம் எந்தவித […]
சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியான துரைசாமிக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் இத்தம்பதிகள் இருவரும் தொழில் சம்பந்தமாக மொபட்டில் வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி செல்வதற்க்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் வந்து கொண்டிருக்கும்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த […]
நல்லங்கியூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நல்லங்கியூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து தினமும் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் இருந்தும் பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வரும்போது பகதர்கள் சிலர் எலுமிச்சை அலகு, வேல் அலகு குத்தி அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நல்லங்கியூர் மாரியம்மன் […]
ஆத்தூர் பகுதியில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் மணி தனது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்து வைத்துள்ளார். அப்போது திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]
சேலம் மாவட்டத்தில் சகோதரி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் சகோதரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் முத்து கவுண்டர் மற்றும் வீராக்காள் என்பவர்கள் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். முத்து கவுண்டருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் பேரக்குழந்தைகளும், விராக்காளுக்கு திருமணமாகி கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் வீராக்காள் திடீரென இறந்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த வீராக்காளின் தம்பி முத்து கவுண்டர் அக்காவின் […]
சேலம் மாவட்டத்தில் மாரியம்மன்- காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றுள்ளது. அப்போது திருவிழாவில் பக்தர்கள் உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டமானது காடையாம்பட்டி பிரிவு ரோட்டிலிருந்து ஆரம்பித்து இளம்பிள்ளை நகரை சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த தேரோட்டதில் தேரை […]
அரியலூர் மாவட்டத்தில் முதலாளியை வேலைக்காரன் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் பகுதியில் யுவான் பெர்னாண்டர் என்பவர் வசித்து வந்தார். சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் யுவான் பெர்னாண்டர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் 2 ஆயிரத்து 70 ரூபாயை திருடியதை யுவான் பெர்னாண்டர் பார்த்துக்கொண்டார். இதனால் […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியிராக பணிபுரியும் ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி மேச்சேரி- ஓமலூர் சாலையில் மொபட்டில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஆர்த்தி கழுத்திலிருந்த 5 3/4 பவுன் […]
சேலத்தில் வாகன சோதனையின் போது கடத்தி சென்ற 22 1/2 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி […]
சேலம் மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் சரவணன் இல்லாத போது அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு வந்தவுடன் தான் விஷம் […]
சேலம் மாவட்டத்தில் குப்பை கிடங்கில் தீடிரென தீப்பற்றியதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் பகுதியில் குப்பைகளை மொத்தமாக குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜலகண்டாபுரத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ வேறு எந்த பகுதியில் பரவி விடக் கூடாது என்பதற்க்காக […]
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தியம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக […]
சேலம் மாவட்டத்தில அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த 16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நேற்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காளியம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் […]
சேலம் மாவட்டத்தில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஆணுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்கு ஒன்று சேலம் கோர்ட்டில் நடந்துள்ளது. அந்த வழக்கில் மணியின் மனைவி பேபி செல்வராஜ்க்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு குடித்து விட்டு […]
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையில் போது காவல் துறையினரால் பறிமுதல் செயபய்யப்ட்ட 5 கோடி பணம் ஆவணம் காட்டியதால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அன்புராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
சேலம் மாவட்டத்தில் இடத்தகறாரில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி உண்ணாமலை, சின்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளார்கள். மேலும் முதல் மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி, ராஜேந்திரன் என்ற 2 மகன்களும் இரண்டாவது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன், சிவகுமார் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இந்நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான நிலத்தை நான்கு […]
சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு 2600 டன் பருப்பு மூட்டைகள் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்க்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருப்பு, கோதுமை, சிமெண்ட், உரமூட்டை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் மார்க்கெட்டிற்க்கு சரக்கு ரயில் மூலமாக 2600 டன் பருப்பு மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்தும் […]
சேலம் மாவட்டத்தில் சோளத்தட்டு அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மெய்யனூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். கவிதா விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டு அறுத்து கொண்டிருக்கும் போது கவிதாவை பாம்பு கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு பூதப்பாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 87 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை மேற்கொண்டனர். […]
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவனம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் ஒன்றியம் பகுதியிலிருக்கும் மும்முடி வீரகனுர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் […]
சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ராக்கிபட்டி பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வழியாக சென்று மீண்டும் […]
சேலம் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்து நேற்று திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. அந்த விழாவின் போது பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் பூங்கரகம் எடுத்து வி.என் பாளையத்தில் தொடங்கி தேர் வீதி மற்றும் சந்தைபேட்டை வழியாக கோவிலை வந்தடைந்துள்ளது. மேலும் […]
சேலம் மாவட்டத்தில் திருவிழா பணிக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளான். மேலும் ரமேஷ் திருமண விழாக்களில் லைட் செட்டிங் மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொப்பளான் காட்டுவளவு பகுதியில் திருவிழாவிற்கு பணிக்காக சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் அவரது கிணற்றில் மோட்டார் சரியாக வேலை செய்யவில்லை. […]
சின்கிபுரம் கிராமத்தில் இரு கோவில்களின் தேரோட்டம் ஒரே நாளில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் மிகவும் பழமையான அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களிலும் தேரோட்டம் நடத்த வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரியவர்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த கோவில்களில் உள்ள தேர்களை முறையாக பராமரிக்காமல் அவைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுள்ளது. இதனால் ஊர் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து […]