சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன . சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் […]
Category: சேலம்
சேலத்தில் நேற்று ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது . தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக துணை ராணுவ படையினர் சேலம் மாநகருக்கு பாதுகாப்பு அளிக்க வந்துள்ளனர் . தேர்தல் நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், துணை ராணுவ படையினர் போலீசாருடன் இணைந்து ,கொடி அணிவகுப்பை நடத்தினர். இந்த அணிவகுப்பு ஆனது நேற்றுக்காலை செவ்வாப்பேட்டை பால் மார்க்கெட் […]
திருமனூர் அருகே பேருந்திற்காக நின்றுகொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ,வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனிசாமியின் மகள் 14 வயதுடைய ஓவிய பிரியா. இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவிய பிரியா தனது பாட்டி வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். பள்ளியிலிருந்து, நேற்று மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்து நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது , […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. ஆனால் தற்போது வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 102.71 அடியாக இருந்துள்ளது. இந்த […]
சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கி தராததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கலத்துப்பாடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் சுடுகாடிற்கு இடம் தனியாக இல்லை. அதனால் இந்த கிராமத்தில் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு கிராமமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து கிராமமக்கள் மேல் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வருகிற […]
வரும் 15 ம் தேதி நடைபெற இருந்த லாரி உரிமையாளர் சங்கத்தில் வேலை நிறுத்த போராட்டமானது வாபஸ் பெறப்பட்டது . சேலம் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வருடாந்திர மகாசபை கூட்டமானது நேற்று சங்கத் தலைவரான கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் ஆகிய பதவிகளில் உள்ள கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில்:- கடந்த […]
சேலம் மாவட்டத்தில் 61,745 வாக்காளர்கள் 80வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்ட ஆட்சியரான ராமன் சேலம் மாவட்டத்திலுள்ள மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 61 ஆயிரத்து 745 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இதுப்பற்றி அவர் அறிக்கையில் கூறியிருப்பது:- அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ,பறக்கும் படையினர் […]
வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் கிராமத்தில் செல்லத்துரை என்ற பிரபல ரவுடி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய குற்றவாளியான வேலூரைச் சேர்ந்த வசூர்ராஜா என்ற ரவுடி தலைமறைவாக இருந்துள்ளார். இவர் கடந்த […]
காரில் கொண்டுவரப்பட்ட 1232 வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள வேம்பூர் கூட்டு ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி […]
ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தூக்கம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் அப்பகுதியில் விசாரித்தபோது கொத்தனார் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரும் செல்போனை திருடியது […]
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் விற்று அந்த பணத்தை வைத்து குடித்துக்கொண்டு ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அவரது தாயும் மனைவியும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் யாருடைய சொல்லையும் கேட்காததால் […]
மேட்டூர் அணையில் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதனால் அணையின் நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் நீர் வரத்து தற்போது குறைந்துள்ளது காரணம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் நேற்றும் 183 அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் […]
மேட்டூர் அணைக்கு காவேரி பகுதிலிருந்து வரும் நீர்வரதானது குறைந்து உள்ளது . சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக காணப்படுகிறது. காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே இருக்கிறது. 172 கனஅடி தண்ணீர் ஆனது நேற்று அணைக்கு வந்துள்ளது இன்று இதன் அளவு அதிகரித்து 153 கன அடி தண்ணீராக உள்ளது. ஆனால் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியிடப்படுவதால், அணையின் நீர் […]
மதுப்பழக்கத்தால் சொத்துக்களை விற்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவனை கொன்றுவிட்டதாக மனைவி வாக்குமூலத்தில் கூறினார் . சேலம் மாவட்ட அயோத்தியாபட்டணத்திற்கு அடுத்துள்ள வெள்ளியம்பட்டிகிராமத்தை சேர்ந்தவரான 42 வயதுடைய வேதகிரி என்பவரின் மனைவி 38 வயதுடைய சித்ரா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். வேதகிரி விவசாய தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்து வந்தார். தினமும் குடித்து விட்டு மனைவி […]
மதுப்பழக்கத்தால் சொத்துக்களை விற்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவனை கொன்றுவிட்டதாக மனைவி வாக்குமூலத்தில் கூறினார் . சேலம் மாவட்ட அயோத்தியாபட்டணத்திற்கு அடுத்துள்ள வெள்ளியம்பட்டிகிராமத்தை சேர்ந்தவரான 42 வயதுடைய வேதகிரி என்பவரின் மனைவி 38 வயதுடைய சித்ரா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். வேதகிரி விவசாய தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்து வந்தார். தினமும் குடித்து விட்டு மனைவி […]
ஒருதலைக் காதலில் ஈடுபட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். அவருடைய மகனான விக்னேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
காதலில் தோல்வியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பலமுறை அந்த பெண்ணிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் சம்மதிக்காததால் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கன்னங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. […]
பட்டதாரி இளம் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஆவடி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 21 வயது இளம் பெண்ணை பார்த்த கனகராஜ் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த […]
வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏழுமலை என்பவர் கொண்டுவந்த 4.75 கிலோ […]
வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் உள்ள அதிகாரிகள் நேற்று மாலை பணிகளை முடித்த பின்னர் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த […]
திருவிழாக்களின் பொது கச்சேரிகள், ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களின்போது மேடை கச்சேரிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மேடை கச்சேரிகளில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும்போது முகம் சுளிக்கும் வகையில் ஆடுவதாக குற்றம்சாட்டும் எழுந்து வருகிறது. நடன கலைஞர்கள் ஆடுவதை பார்ப்பவர்களையும் மேடையில் அழைத்து ஆடவைத்து முகம் சுழிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் பட்ட பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முகம் சுளிக்கும் […]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவானது வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. […]
தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுகோட்டை என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த […]
வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பனங்காடு கிழக்கு பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பெத்தனூர் களக்காடு பகுதியில் வசித்து வரும் அருண்குமார் என்பவருக்கும், சுந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அருண்குமார் வந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த […]
அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை அருகில் ரயிலில் அடிபட்டு அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நல்லூர் பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே இருக்கும் தனியார் விடுதியில் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்த சரவணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சரவணன் […]
மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது. இந்த […]
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனால் […]
பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]
சமையல் செய்துகொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் நரசிங்கபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. ஓட்டுனரான இவருடைய மனைவி செல்வி சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ சிலிண்டர் வரை வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். […]
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் […]
சேலம் ஆத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள வீர முத்துமாரியப்பன் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முடிவு செய்து, பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டார். பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை ராஜா என்ற […]
தேங்காய் களத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை செய்ய சொன்ன கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தேங்காய் களத்தின் நிர்வாகிகளிடம் சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றி (37). இவரது மனைவி கவிதா (30). இவர்கள் காங்கயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12-ம் தேதி காலை தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை […]
25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் […]
குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரனுக்கு கிடைத்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் சுரேந்திரன் மீது சேலம் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி அண்ணாநகர் பகுதியில் அசுரப் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு நூருஸ் ஹீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அசுரப் அலி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு […]
ரியல் எஸ்டேட் அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவின், சுதர்சன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். […]
திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒட்டங்காடு பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக கரூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமி கிணறு பகுதியில் வசிக்கும் சத்தியபாமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததால் சத்யபாமாவின் கணவர் யோகேஸ்வரன் தனது குழந்தையை பார்ப்பதற்காக கடந்த […]
குற்றவாளி ஒருவர் காவல்நிலையத்தில் முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் வசிப்பவர் பைரோஸ். இவர் மீது சேலம் மாநகர காவல் நிலையத்தில் பல்வேறு பகுதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 2008ஆம் வருடம் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பைரோஸ் தற்போது வெளியே வந்துள்ளார். இதையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் மீண்டும் அவர் […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கம் கிராமத்தில் சுப்பிரமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்பிரமணி விரக்தியில் […]
கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து சரவணன் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் […]
சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திருநங்கைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திருநங்கைகள் இருதரப்பினராக வந்தனர். அப்போழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த திருநங்கைகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]
நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]
கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் […]
மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல […]
குடும்பத்திலுள்ளவர்களை மிரட்டியதோடு அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரிகா, ஜெனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் தீபனின் தாயார் கலைச்செல்வி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே […]
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]