குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த நிலக்கடலையை மருத்துவர்கள் அதிநவீன கருவி மூலம் அகற்றினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- பழனியம்மாள்.இத்தம்பதியருக்கு 2 வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரதீப் கையில் கிடைத்த நிலக்கடலையை வாயில் போட்டு விழுங்கியிருக்கின்றான். அப்போது நிலக்கடலை குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைத்துள்ளது. இதையடுத்து மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் […]
Category: சேலம்
நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் […]
சேலத்தில் பொலிரோ கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பவானியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொலிரோ கார் ஒன்று சேலம் நோக்கி வந்தது இந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது இந்த […]
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சந்தேகமடைந்த […]
சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திவாகர் என்ற மகன் உள்ளார் . திவாகர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் […]
சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த […]
குடும்ப தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணிபுரிந்தார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக கணவனுக்கும் மனைவிக்கும் […]
புதுச்சத்திரம் அருகே வெந்நீர் வைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சத்திரம் அருகே தத்தா திரிபுரம் என்ற பகுதியில் சரவணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் திவ்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்குச் சென்று இருந்தனர். அப்போது திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் […]
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, […]
14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற ஒரு மகன் உள்ளார். பெரியசாமி அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். பெரியசாமி கட்டாயப்படுத்தியதை அச்சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் […]
பச்சிளங் குழந்தையை இரு துண்டுகளாக வெட்டி கொலை செய்து விட்டு ஒரு பாகத்தை மட்டும் தேவூர் அருகே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் பழனிசாமி என்கின்ற சின்னத்தம்பி வசித்து வருகிறார். நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து இருப்பதை கண்டு அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் […]
பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டதில் கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை என பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செல்லத்துரைக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் செல்லத்துரை தனது காரில் தனியாக சென்றுள்ளார். அப்போது எதிரே இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் காரை […]
சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]
சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் 20 வயதுடைய சரண். இவர் சேலத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில் சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது . திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் […]
காவல் தேர்வு எழுத சென்றவர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (24) என்பவர் காவல் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காவலர் தேர்வு நடைபெற்றது. அதனை எழுதுவதற்காக தனது பைக்கில் பெரியவண்ணன் சென்றுள்ளார். அப்போது உடையாபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதனால் பெரியண்ணன் சம்பவ […]
சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எட்டு வழி சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் சாலை திட்ட இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சேர்ந்தவர் நரேந்திரன். 41 வயதுடைய இவர் 09.8.2016-ம் அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம் சேலம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து உள்ளது. உடனே சிறுமியின் […]
மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். […]
பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில் பெண் குழந்தை இருந்து வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 […]
ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. அதன்பின், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தளர்வுகளுக்கு பின் கொரோனா மீதான பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அதிக அளவில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
எட்டு குட்டிகளை பெற்றெடுத்த நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இரு பாலாறு ஆறுகளுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றனர். புயலால் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்துவந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை பெற்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை […]
முதலமைச்சரால் தான் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தினேஷ் நிகழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி மாணவர் தினேஷ் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கூலி தொழிலாளியின் மகனான இவர் 2008-ஆம் ஆண்டு பள்ளி முடிந்ததும் மருத்துவராக வேண்டும் என்று விடா முயற்சியுடன் படித்து வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்று நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் […]
தம்பி ஒருவர் தனது அக்காவின் திருமணத்தன்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் அக்கா கதறியழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(24). இவருடைய அக்காவிற்கு திருமணம் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் தன்னுடைய நண்பர்களான கார்த்திகேயன்(20) மற்றும் பார்த்தசாரதி(20) என்ற இருவரையும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப் பாதையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில் காப்பாற்ற யாரும் முன்வராமல், செல்போனில் வீடியோ எடுத்ததாக உயிழந்த பெண்ணின் மகன் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு […]
கூட்டுறவு வங்கிக்கான உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு வரும் 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது. சேலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21- 22-ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் வங்கி மற்றும் சங்க உறுப்பினர்களிடமிருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் கடன் உதவி, நகை கடன், பயிர் கடன், […]
நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதைப்போல பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இந்திரகுமார். இவருடைய மகள் நர்மதா(20) கோயம்புத்தூர் நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த நர்மதாவின் தோழி ஒருவர் இந்த நம்பரில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வருகிறது என்று ஒரு நம்பரை கொடுத்து அவரிடம் பேசு என்று […]
சிறுமியை கடத்தி வந்து சேலத்தில் குடும்பம் நடத்திய வாலிபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15 ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பிரசவ வார்டில் இருந்த மருத்துவர்களின் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான […]
சேலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. சேலத்தில் இருக்கின்ற பிரபல தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் பெயர்: Netware softtech solution பணி: project manager production/ manufacturing/ maintenance. கல்வித்தகுதி: UG: graduation not required, B Tech/BE. In any specialisation, diploma in any specialisation , any graduate in any specialisation PG: M.Tech in any […]
சாதாரண மக்களும் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் உதான் திட்டம். இந்த திட்டம் தமிழகத்திலும் அமலில் உள்ளது. இதன் படி, உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு 8:15 மணிக்கு சேலம் வந்து சேரும். பின் சேலத்திலிருந்து 8:30 மணிக்கு புறப்பட்டு 9:15க்கு சென்னை வரும் என […]
திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு கறவைப் பசு ஒன்றை வாங்கி வளர்த்து வந்த நிலையில் அந்த பசு இன்று மூன்று தலையுடன் கூடிய அதிசய கன்று ஒன்றை ஈன்றது. பின்னர் சிறிது நேரத்தில் மூன்று தலையுடன் பிறந்த அந்த அதிசய கன்றுக்குட்டி பரிதவமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ […]
கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வன உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வன உயிரியல் பூங்காவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அரசு அறிவித்துள்ள […]
சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது […]
வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் […]
கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற […]
குடித்துவிட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜெகன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெகன் தினமும் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஜெகன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் போது தவறி […]
தலைவாசல் அருகே மூன்று மாத குழந்தையை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா உமையாள்புரம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகள் தவமணி என்பவருக்கும், தலைவாசல் அருகே சார்பாய் புதூர் தேவேந்திரன் நகர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணிகண்டன் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு […]
சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக […]
சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3.20 லட்சம் ரூபாய் மற்றும் 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறையின் கீழ் சேலம் கிழக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் துணைத்தலைவராக மருத்துவர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கடலூர் மண்டலத்துக்கு துணைத் தலைவராக பணியிட […]
சேலத்தில் மரவள்ளிகிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் உறுதி அளித்துள்ளார். மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் தொடர்பான கூட்டத்தில் கூட்டுறவு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறரர் . கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த சிறுமியை பெற்றோர்கள் பாட்டி வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த சிறுமியை அவருடைய உறவினரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கட்டிப்பிடித்து […]
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லை என சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்காக கொரோனாவிற்கு பிந்தைய ஒருங்கிணைந்த கவனிப்பு மையம் சேலம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார். இதில் கொரோனா இருந்து என்பது குணமடைத்தவர்களுக்கு சுவாச பயிற்சி, உணவு முறை, உளவியல் அறிவுரைகள் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கொரோனா […]
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ […]
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. கந்தம்பட்டி உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் பணம் […]