சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விலகுவது ஏற்காடு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக இங்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளைக் […]
Category: சேலம்
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரதிலுள்ள சூரப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட நொரச்சி வளவு பகுதியில் வசிப்பவர் வர்ணன். மெக்கானிக் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். மற்றும் இவருடைய மனைவி வீட்டின் கதவை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து வீட்டிற்குள் […]
சேலத்தில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் மறவுநெறி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்த இந்துப்பிரியா என்பவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்தார். செடிஞ்சவடி காட்டுவளவ பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை செயலாளரான ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வனுக்கு வேறு இடத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த இந்துப்பிரியா இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. கடந்த எட்டாம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உதயா தெரிவித்திருந்தார். எனினும் போலீசாரின் விசாரணையில் ரவியின் மனைவி உதயாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் […]
சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர […]
சேலம் அருகே சரிவர சிகிச்சை அளிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் சிறுநாயக்கன்பட்டி பகுதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்திவேலை அனுமதித்தனர். கடந்த 4 நாட்களாக சக்திவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 6 லட்ச […]
மனைவி மீது தீ வைத்த கணவன்…!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]
சேலம் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை பிறப்பதற்கு முன்பாகவே உறவினர்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அருகே வசித்துக் கொண்டிருக்கும் சரவணன் என்பவர்,தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாக கூறி, உடலை வைக்கும் குளிர் சாதன பெட்டி கொண்டு வருமாறு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டி வந்தவுடன் முதியவர் பாலசுப்ரமணியத்தின் உடலை அதற்குள் வைத்து விட்டு, உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுப்பதற்கு […]
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் […]
உடல் நலத்துடன் இருந்தவரை ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளே வைத்து ஆன்மா பிரிவதாக உயிருக்குப் போராட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார். இவர் தனது தம்பி சரவணன் மற்றும் தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ, கீதா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாலசுப்பிரமணிய குமாரின் தம்பி சரவணன் ஃப்ரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகவும் அவரது சடலத்தை வைக்க ஃப்ரீசர் […]
சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை இறந்ததாக கூறி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் விடிய விடிய வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் சரவணன் இவரது அண்ணன் பாலசுப்பிரமணி குமார் என்பவர் இறந்துவிட்டதாக கூறி நேற்று குளிரூட்டும் சவபெட்டிகாக தகவல் கொடுத்துள்ளனர். குளிரூட்டி சவப்பெட்டி பணியாளர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து பெட்டியை வைத்துவிட்டு மதியம் வருவதாக கூறி சென்றுள்ளனர். அதன்படி இன்று மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்தவர்கள் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு […]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.71 டிஎம்சி ஆக […]
தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் […]
தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் […]
தமிழக முதலமைச்சரின் தாயார் இன்று திடீரென உயிரிழந்ததால் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயம்மாளின் இறுதி ஊர்வலம் தற்பொழுது நடந்து வருகின்றது. முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில நாட்களுக்கு முன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 வயது நிறைவடைந்த தவசாயம்மாள் நேற்று நள்ளிரவு இயற்கை எய்தினார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு […]
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்று இரவு காலமானார்.சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தவசாயி அம்மாள். 93 வயதான இவர் நேற்று இரவு (திங்கள் கிழமை) சுமார் 11 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு பழனிச்சாமி,கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது தாயார் காலமானது தெரிந்ததும் முதலமைச்சர் அவர்கள் தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து […]
ஆத்தூர் அருகே உறவினர்களுடன் காட்டுக்குள் இரவில் வேட்டையாடச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் அந்தோணிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதில் குணசேகரன் என்ற மகன் இருக்கிறார். அவர் இரவு நேரங்களில் காட்டுப் பகுதிக்குச் சென்று காட்டுப்பன்றி மற்றும் முயல் போன்றவற்றின் வேட்டையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது […]
எடப்பாடி நகரம் முக்கிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின் முக்கியப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வெள்ளாண்டி வலசு, நைநம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் தவாம் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் பயத்துடன் நடந்து செல்கின்றனர். சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதால் வாகன […]
சேலம் அருகே தாமாக முன்வந்து கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு ஏழு நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து மீண்டும் பாதிப்பை கட்டுக்குப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்ற […]
சேலம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு சுருக்கமுறை திருத்தம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்படி சேலம் மாவட்டத்தில் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் […]
சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கடந்த சில தினங்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து கனமழை காரணமாக சீலாவரி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏரியின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் கழிவுநீரில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை […]
கொரோனா பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சாலையில் சிதறிக் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கொரோனா பரிசோதனைகாக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் சாலையில் சிதறிக் கிடந்து உள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சாலையில் கிடந்த பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர். சேலத்தை பொறுத்தவரை […]
சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளி பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த சளி மாதிரி பரிசோதனை எடுக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் […]
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரின் அளவு குறைந்து வந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. […]
ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார். […]
சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயதான பெற்றோரை அடித்துத் துரத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரை சேர்ந்தவர்கள் முனியன்-ரஞ்சிதம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நால்வருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு சிறிய வீடு ஒன்றில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தனர். வயதான தம்பதி தங்களுக்கென்று எந்த ஒரு பிடிமானமும் வைத்துக்கொள்ளவில்லை. சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டன் பட்டிஅருகே உள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குருநாதன்.இவர் எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புக்காக சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குருநாதன் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கை தவறி கீழே விழுந்தார். அதில் மின்சாரம் […]
எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் […]
இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு தூக்கி தடவிக்கொடுத்து, வாயில் வைத்து ஊதியது நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கண்கலக்க வைத்தது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ள ஏற்காடு மலைப்பாதையில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப் பாதைகளில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில் நேற்று காலை குட்டிக் குரங்கு ஒன்று வாகனத்தில் சிக்கி இறந்துள்ளது. இறந்துபோன குட்டியை தாய் குரங்கு […]
இந்தியாவிற்கு வரும் பறவைகளை வரவேற்க பறவை ஆர்வலர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை காலமாகும். பொதுவாக இந்த காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் பறவைகள் இந்தியாவிற்கு இறை தேடி வரும் என கூறுவர். இவ்வருடம் இந்த காலத்தில் வர இருக்கும் பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பறவை ஆர்வலர்கள் சுவரெங்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி போன்ற பறவைகள் மத்திய ஆசியா மற்றும் […]
சேலம் மாவட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்த சக காவலர்யிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையை திரும்ப செலுத்தும்படி சககாவலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் வெங்கடேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது சகோதரரிடம் செல்போனில் […]
தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]
சேலம் மாவட்ட ம் ஆத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தர்மபுரி போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியில் அண்ணா நகரை சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ். 28 வயதாகும் அவர் கடந்த 2006ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்தார். கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டார்.அங்கிருந்த அரசு பள்ளிகளில் 7 போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த பொழுது நேற்று இரவு வெங்கடேசன் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு பிணமாக […]
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையின்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை. சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை மதித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]
லாட்டரியால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நண்பரான சதீஷ் என்பவர் அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழும்படி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அகமது பாஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவர் […]
சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகேயுள்ள நரசோதிபட்டி பகுதியில் அன்பழகன் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ […]
ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பெற்று செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க 31/08/2020 அன்றுவரை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் வருகின்ற 30/09/2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை […]
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கொடூரன் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்ச்சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து சுப முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள், புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷ வைபவங்களும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட குண்டுமல்லி தற்போது 800 முதல் 1000 […]
சேலம் மாநகரில் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் ஆவின் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் 25 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகரில் உள்ள தாதகாபட்டி பழைய பேருந்து நிலையம், குகை நெத்திமேடு உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பால் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,204 கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]
கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]
சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென மாயமாகினார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 98.64 அடி அணையின் நீர் இருப்பு _63.09அடி அணைக்கு நீர்வரத்து _11,441 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.94 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]
சேலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்படாமல் மண்டிகளில் தேங்கியுள்ளன. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வாழப்பாடி, குப்பனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேங்காய் மண்டிகள் இயங்கி வருகின்றன. சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இந்த மண்டிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நார் உரித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.03 அடி அணையின் நீர் இருப்பு _63.590 அடி அணைக்கு நீர்வரத்து _14,162 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _16,500 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி அணைக்கு […]