Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மர்மப்பொருள் வெடித்து உயிரிழந்த சேலம் விவசாயி வழக்கில் திடீர் திருப்பம்!

சேலத்தில்  மர்ம பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அண்ணனே தம்பியை கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த  16ஆம் தேதி  இரவு விவசாயி மணி  வீட்டின் அருகே வானொலிப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து தனது  வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் 17-ஆம் தேதி  மாலை 4 மணி அளவில் வானொலிப் பெட்டியை எடுத்து மின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’… இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் […]

Categories
சேலம் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மற்றும் சேலத்திலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலாகிறது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சாலையில் கிடந்த எஃப்.எம்”… வீட்டுக்கு எடுத்து வந்து ஆன் செய்த விவசாயி பலி… சிறுமி கவலைக்கிடம்..!!

பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ காண்பித்து… சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

சிறுமியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை  போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகிலுள்ள புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் வடிவேல்.. 47 வயதுடைய இவன் அதே பகுதியில் கூலிவேலை செய்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார்.. இந்தநிலையில் வடிவேல், புள்ளாக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்தவரும் 11 வயது சிறுமியிடம், தனது மொபைல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். இதில் பயந்துபோன […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவி… முதல்வர்!!

சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூன்றே மாதத்தில்…. சேலத்தில் மட்டும்…. 12,609 குழந்தைகள் பிறப்பு…!!

சேலத்தில் கடந்த 3 மாதத்தில் 12,609 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஐந்து கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் , மற்றும் தனியார் […]

Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊராடங்கில் தளர்வு…. விடுதிகளை திறக்க தொடர் தடை…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

விடுதிகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஐந்தாம் கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, ஓட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரவைத்து […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் டிஸ்சார்ஜ்..!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மருத்துவக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து தினமும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 பேரில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது 39 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினர்கள் சதி…. காதல் மனைவிக்கு 2வது கல்யாணம்…. 1 வயது குழந்தையுடன் கதறும் கணவன்….!!

சேலத்தில் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முயற்சித்ததையடுத்து, ஆண் குழந்தையுடன் கணவன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பூபதிராஜன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவரும் இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக அங்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். பின் அங்கே உள்ள இன்ஜினீயரிங் காலேஜில் படித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேர் இன்று டிஸ்சார்ஜ்…!!

கொரோனவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 86 பேர் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் சேலம் வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69 ஆக குறைந்துள்ளது. நேற்று வரை சேலத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருந்தது. அதில் 68 பேர் குணமடைந்த நிலையில் 146 பேர் […]

Categories
சேலம் மதுரை மாநில செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் சேலத்தில் 13 பேர், மதுரையில் 19 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் எடப்பாடியில் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!!

சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டது சேலம் மாநகராட்சி…. 35 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது. சேலத்தில் முதல்முதலாக மார்ச் 11ம் தேதி 5 நபர்களுக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 24 ஆண்கள், 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் முக்கிய நகரங்கள்…… பச்சை மண்டலமாகும் சேலம்!

சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாநகரமானது சேலம்… சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்!!

சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

1/2 கி.மீ க்கு முன் வரிசை தொடக்கம்…. டோக்கன்க்கு ஒரு FULL தான்…. அசத்தும் சேலம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில், அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டோக்கன் தாறோம்….! ”ஒரு புல் மட்டும் வாங்கிக்கோங்க” சேலத்தில் அதிரடி முடிவு ..!!

சேலத்தின் ஓமலூரில் டஸ்மார்க் கடையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

நாளை முதல் விற்பனை….! ”சேலத்தில் எல்லாம் தயார்” பணிகள் மும்மரம் …!!

மதுபானக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் டாஸ்மாக்கை நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 216 மதுபான கடைகள் இருக்கிறது. இதில் நகரப் பகுதிகளில் மட்டும் 67 கடைகள் இருக்கின்றது. இந்த 216 கடைகளில் 48 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பதால் அந்த 48 கடைகளைத் தவிர மீதமுள்ள 168 கடைகள் திறப்பு அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. சேலம் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் இருக்கக்கூடிய மதுபானக் கடைகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து வங்கிகள், ஏடிஎம்-களில் காவலரை நியமிக்க உத்தரவு… சேலம் மாநகராட்சி!

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள்..!

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு எந்த கடைகளும் இருக்காது… முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்!

சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை….. 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி!

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர்களை யாரும் தடுக்க கூடாது – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு …!!

சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில்,  சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 7 பேர் குணமடைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அதற்க்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் அரசு நடவடிக்கை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இருப்பது தெரிந்தும் அலட்சியம்…16 பேர் சிறையிலடைப்பு..!!

கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்து கொரோனோவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 16 பேரையும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் 16 பேரும், சேலம் நீதிமன்ற உத்தரவுபடி காலை 6.30 மணி அளவில் ஆத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அங்கிருந்து அனைவரும் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் பாதிப்பு இடங்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்!

சேலத்தில் கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் பகுதியை கண்டறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. நாளை (14-04-2020) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு புதிய நடைமுறைகளை கையிலெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் வீ ட்ரேஸ் (vee trace) என்ற […]

Categories
கரூர் காஞ்சிபுரம் சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மழையால் வாழை மரங்கள், நெல் மூட்டைகள் சேதம்… விவசாயிகள் வேதனை..!!

மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனோ நிவாரணம் வழங்கிய கலெக்டர்!

சேலத்திலுள்ள 8,600 வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனோ நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று மேலும்  பரவாமல் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலங்களைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் தற்காலிக இறைச்சி கடைகள்… வாங்குவதற்கு திரண்ட மக்கள்..!!

சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர். வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் உயிரிழப்பு …!!

 சேலத்தில் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட முதியவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50 க்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  571 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள்

BREAKING : டெல்லியில் இருந்து சேலம் திரும்பியவர் உயிரிழப்பு ….!!

டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலரையும் கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகளை தமிழக சுகாதாரத்துறை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
சேலம் திருவாரூர் மாநில செய்திகள்

சம்பளமும் இல்ல…. மாஸ்க்கும் இல்ல…. மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தம்…..!!

சேலம், திருவாரூரில் இரண்டு மாதங்களாக சம்பளம் தராமல், கொரோனோ நோய் பரவி வரும் காலத்தில் முக கவசமும் தராமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதம் ஊதியம் வழங்காமலும், கொரோனா நோய் தாக்கம் அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்கும் வழங்காமல் எங்களை அலக்களித்து வருவது வேதனை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எங்கள காப்பாத்துங்க , நாங்க வாழனும்….. சேலத்தில் மீண்டும் ஒரு காதல் சிட்டுக்கள் ….!!

இளமதி – செல்வன் ஜாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து மற்றொரு திருமணம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள கோம்பைக்காடு பகுதி பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். சேலம் அரசு கல்லூரியில் படித்து வரும் சிவகுமாரின் மகள் ஜெயவர்த்தினிக்கும் அந்தப் பகுதியில் வசித்து வந்த கார்த்தி என்பவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயவர்த்தினி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கார்த்தியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஜெயவர்த்தினி […]

Categories
ஈரோடு சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பதியைப் பிரித்த அமைச்சரை பொறுப்பிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும்:- திருமாவளவன் காட்டம்!!

கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி– செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதல் வேண்டாம்…. ”எனக்கு வீடு தான் முக்கியம்” இளமதியில் திடீர் முடிவு…!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : மேட்டூர் காவல்நிலையத்தில் இளமதி ஆஜர் …!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதி கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பயங்கரம்…வடமாநில குடும்பத்தினர் கொலை..!!

சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் கல்லூரியில் பிரியாணி திருவிழா : விதவிதமான பிரியாணிகளை செய்து அசத்திய மாணவர்கள்!

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி நடத்திய பிரியாணி திருவிழாவில் விதவிதமான பிரியாணிகளை மாணவர்கள் செய்து அசத்தினார்கள். ராமலிங்கபுரத்தில் மகளிர் தினத்தை கொண்டாட நினைத்த தனியார் கல்லூரி ஒன்று இளைஞர்களை கவர பிரியாணி தயாரிக்கும் திருவிழாவை ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்க பல கல்லூரிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் என 200 மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். 65 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாணவர்கள் செட்டிநாட்டு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டது. சேலத்தை அடுத்து ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகியது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  29 மேற்பட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் பெயர்பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 […]

Categories

Tech |