மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிய வந்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டியூர் என்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பெண் யானை இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 15 முதல் 20 வயது வரை இருக்கக்கூடிய அந்த பெண் யானையை காதுப் பகுதியில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் முதற்கட்ட விசாரணையில் எப்படி இறந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு […]
Category: சற்றுமுன்
தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி […]
சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைகடந்துள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே மூன்று முறை இந்த எண்ணிக்கையானது உச்சம் தொட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் 946 ஆக இருந்த மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் […]
தூத்துக்குடி மாவட்டம் காரைக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதாக 4 பேரும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்க வேண்டும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.
உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இன்று காலை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இருந்தது. இந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து விரிவான உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்ட்டு இருக்கின்றது. இதில் முன்னதாக சாட்சி வழங்கிய பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அதேபோல சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுள்ளது என்ற பாராட்டையும் நீதிகள் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து சாத்தான்குளம் […]
சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும், தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பல கட்ட வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடைபெற வேண்டும் தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த […]
தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக 94 ஆயிரத்தை கடந்து இருக்கிறது […]
மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மியான்மர் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]
தந்தை – மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர், 2 தலைமை காவலர் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ […]
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி […]
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முதலே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளராக இந்து ரகு கணேஷிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளரான […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் […]
தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்ற பின்பு அவர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]
சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 காவல் உதவி ஆய்வாளர், 2 காவல் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர். இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]
சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். […]
சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய துணை ஆய்வாளர் எஸ்.ஐ ரகு கணேஷை கோர்ட்டில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை […]
சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]
சாத்தான்குளத்தில் சந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை தான் ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் பெற்றுக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தபடியே வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இன்று காலை முதல் 12 குழுக்களாக சிபிசிஐடி போலீஸ் பிரிந்து இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து இடங்களிலும் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் கடை, ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு […]
தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சென்னை – 2,182 மதுரை – […]
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]
தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்தது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]
சாத்தான்குளம் சாமானத்தை கண்டித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தனது கண்டனத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸிடம் மாட்டிக்கிட்ட பலர் கூட உயிரோடு திரும்பி வந்திருக்காங்க. ஆனால் சாத்தான்குளம் சம்பவம் நினைத்து பார்க்கும்போது ஈர கொல […]
15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]
சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]
ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]
தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் […]
சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி […]
இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. […]