விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் […]
Category: சற்றுமுன்
கொரோனா பேரழிவிற்கு முதல்வர்தான் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவை தடுக்க அவர் என்ன ஆலோசனை தந்தார் என முதல்வர் கேட்டதற்கு, மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை சொன்னேன். நான் சொன்ன ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனா சமூக பரவல் இல்லை என […]
சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது […]
சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]
உலகளவில் இன்று 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1 கோடியை நெருங்க இருக்கின்றது . சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 99 லட்சத்து 65 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 98 ஆயிரத்து 284 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 747 பேர் பலியான நிலையில், 25 லட்சத்து […]
அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா தமிழக முதல்வர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது களங்கத்தை ஏற்படுத்தியதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது காவல்துறை மிரட்டலுக்கு பயந்து எட்டையபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,939, மதுரை – 218, செங்கல்பட்டு – 248,வேலூர் – 1118, திருவள்ளூர் – 146, திருவண்ணாமலை – 127, அரியலூர் – 4, கோவை – 3, கடலூர் – 11, தருமபுரி – 4, […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது ? ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்த பர்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தாக்கத்தால் மார்ச் முதல் மாதத்திலேயே மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில்தான் கொரோனாவில் உடைய வீரியம் அதிகரிக்கும் என்று அரசு கூறி வருகின்ற நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி […]
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் பேசி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார் பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படுமா ? என்பது குறித்து எழும்பூர் கண்கள் […]
ஆந்திர மாநிலம் கர்னுலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்துள்ளார். நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் அக்ரோ நிறுவனத்தில் அம்மோனியா டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அம்மோனியம் வாயுவால் பாதிக்கப்பட்டு மேலாளர் சீனிவாசராவ் பரிதமாக உயிரிழந்துள்ளார். Andhra Pradesh: Ammonia gas leak detected at factory in the outskirts of Kurnool district's Nandyal town; one dead, says District Collector. Concerned officials and fire tenders […]
பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரதம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை […]
ஓம் நமோ நாராயணாய சொன்னால் கொரோனா ஒடிவிடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 99 லட்சத்து 12 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 97 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 53 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக வல்லரசு நாடான […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,685ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]
இதுவரை இல்லாத புதிய உச்சமாக தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்று ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில்கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.
நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 […]
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த […]
ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக […]
மரணமடைந்த தந்தை – மகன் உடல்களை உறவினர்களை பெற்றுக் கொண்டனர். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு […]
கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]
தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் மரணம் தொடர்பாக திமுகவை சாடினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் கொடுக்கட்டும்…. அப்போது நோய் […]
நான் சொல்லுவதை திமுக கேட்காததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்து விட்டோம் என்று முதல்வர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் […]
பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே […]
கோவில்பட்டி கிளை சிறையில் மரணம் அடைந்த தந்தை மகன் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு அடைந்து. சாத்தான் குளத்த்தில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரிகளான ஜெயராஜ், பெண்ணிக்ஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிர் இழப்புக்கு காரணம் போலீஸ் தான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் […]
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் […]
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்த்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் காவலர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரின் உடல் பாளையங்கோட்டை […]
மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். இந்நிலையில் […]
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். பரிசோதனைகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.இதுவே கொரோனா இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று […]
நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது […]
கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மிக முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை பொறுத்தவரை அதிக அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டருடம் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் தொடர்பான முகாம்களையும் அமைக்க […]
கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ராமநாதபுரத்தில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ரமந்தபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தேதி வரைக்கும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நலம் கருதியும், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் […]
கொரோனா அச்சம் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என […]
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு […]
தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட […]
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரை மாவட்டத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , […]
வருகின்ற 26ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ஆய்வு செய்ய இருக்கின்றார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி பாசனத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதியில் குறுவை சாகுபடி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாகவே திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் உடனடியாக […]
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. […]
புதுச்சேரியில் வரும் 23ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் […]
மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும், குணமடைய செய்வது அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு […]
தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன. கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு […]
கொரோனா சிகிச்சைக்கு அண்ணா பல்கலை கழக ஆடிட்டோரியம் தரு தாயார் என்று துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாலைக்குள் அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்று மாநகராட்சியே கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை சந்தித்துப் பேசியபோது, […]
கொரோனா எப்போது குறையும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. இந்த வைரஸ் வருவதை தடுப்பதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்னுடைய தலைமையிலே பலமுறை கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல முறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் இது குறித்து […]
கொரோனாவை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, இது ஒரு புதிய நோய். இந்த நோய் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் மூலமாக தான் தமிழகத்திலே இந்த நோய் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றோம். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா […]
திருவள்ளுவர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,237 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அண்டை மாவட்டங்களாக உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து இருக்கின்றது. இந்த நிலையில் தான் இந்த 4 மாவட்டங்களுக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலாகியுள்ளதையடுத்து, […]
சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினமும் செங்கல்பட்டில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா என்பது உறுதிசெய்யப்பட்ட\ நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 அதிகரித்துள்ளது. இன்று மாலை இந்த எண்ணிக்கை 100யை தாண்டும் என சுகாதாரத்துறை […]
10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]
சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தமாக கொரோனாவுக்கு 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 625 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 498ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 24 பேர் […]
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2ஆவது நாளாக பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 52,334 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பாக 52,334ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானம் மூலமாக வந்த 10 பேரும், உள்நாட்டு […]
தமிழகத்தில் இன்று மட்டும் 25,000த்திற்கும் அதிகமானோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் […]