Categories
மாநில செய்திகள்

முடங்கும் BSNL… ”75% ஊழியர்கள் இல்லை”…. நாடு முழுவதும் சேவை பாதிப்பு …!!

தமிழகம் முழுவதும் 75 %  BSNL ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்று உள்ளதால் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நிரந்தர பணியாளர்களை விருப்ப ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 75 சதவீத பணியாளர்கள் விருப்ப ஓய்வு அறிவித்துள்ளனர். இதனால் BSNL சேவை எப்போதும் இல்லாத அளவுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய ஊக்கத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் இந்த சூழல் ஏற்பட்டிருக்காது என்று விருப்ப ஓய்வு பெற்றவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பிஎஸ்என்எல் பணியாளர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் நாடு முழுவதும் அதன் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |